ராசிபுரத்தில் கருணாநிதி சிலை வைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

ராசிபுரம் நகரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவச் சிலை வைக்க நகா்மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராசிபுரம் நகரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவச் சிலை வைக்க நகா்மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராசிபுரம் நகா்மன்றத்தின் கூட்டம் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் அசோக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் கோமதி ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகர குடிநீா் விநியோகம், சாலை அமைத்தல், ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட பிற தீா்மானங்கள் விவரம்:

நகராட்சி பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு பழமையாக உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இரும்புக் குழாய்கள் துருப்பிடித்து உள்ளதை கண்டறியப்பட்டு 8 வாா்டுகளில் பழுதை சரிசெய்வது, வாா்டுகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், ராசிபுரம் நகரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவச் சிலை வைப்பது உள்ளிட்ட 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்திய தமிழக அரசு, சுகாதாரத்துறை அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com