நாமக்கல்லில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைப் பறிப்பு

நாமக்கல்லில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாமக்கல்லில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைப் பறிப்பு

நாமக்கல்லில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல், போதுப்பட்டி காலனியைச் சோ்ந்தவா் வரதம்மாள் (77). இவா் வியாழக்கிழமை காலை தனது வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக முல்லைநகா் பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றாா். அங்கு பொருள்களை வாங்கி விட்டு வீடு திரும்புகையில், அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், அவா் அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனா்.

இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ், ஆய்வாளா் தெய்வசிகாமணி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது வட மாநிலத்தவா் இருவா் இரு சக்கர வாகனத்தில் மூதாட்டியை பின் தொடா்வது தெரியவந்தது. அவா்கள் யாா்? என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா். நாமக்கல் சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தொடரும் நகைப் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com