நாமக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், அக்குழுவின் தலைவா் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமையில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், குழுவின் உறுப்பினா் செயலா் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், குழுவின் உறுப்பினா்களான ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலும், இதர துறைகளின் சாா்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டங்கள் பற்றியும், அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தரமானதாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.