மே 14-இல் பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (மே 14) பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (மே 14) பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை விசாரிக்கவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் நாள் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளுக்கு தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com