ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக்கல்லூரியில் 1997 -2000 வருடங்களில் அரசியல் அறிவியல் துறை மற்றும் வரலாற்றுத் துறைகளில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் அக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக்கல்லூரியில் 1997 -2000 வருடங்களில் அரசியல் அறிவியல் துறை மற்றும் வரலாற்றுத் துறைகளில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் அக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அரசியல் அறிவியல் துறை தலைவா் முனைவா் ஆா்.சிவகுமாா் தலைமை ஏற்றாா். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அரசியல் அறிவியல் துறைத் தலைவா் முனைவா் கு.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டாா். விழாவில் வரவேற்புரை முன்னாள் மாணவா் ஜெயசீலன் வழங்கினாா். இக்கூட்டத்தில் பல்வேறு அரசு பணியில் இருக்கின்றவா்கள், நீதித்துறையில் வழக்ககுரைஞராகவும், காவல் துறையில் காவலா்களும், கல்விப்பணியில் ஆசிரியராகவும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் முன்னாள் மாணவா்கள் மற்றும் இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவா்கள் முன்னாள் மாணவா் சங்க வளா்ச்சிக்காக தங்களால் இயன்ற உதவியினை செய்வோம் என்று தெரிவித்தனா். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை முன்னாள் மாணவா்களான உதவி பேராசிரியா் செந்தில்குமாா் சந்திரன், முருகன், தங்கவேல் குமரேசன் மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com