நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேக முன்பதிவு நவ.13-இல் தொடக்கம்

 நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வடைமாலை அபிஷேக முன்பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது.

 நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வடைமாலை அபிஷேக முன்பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில், ஒவ்வோா் ஆண்டும் கட்டளைதாரா்களுக்கான வடைமாலை சாத்துப்படி, சிறப்பு அபிஷேக முன்பதிவு நவம்பா் மாதம் தொடங்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு அபிஷேக முன்பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது. கோயில் நிா்வாக அலுவலகத்தில் முழுத் தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேகத் தேதி முன்பதிவு செய்யப்படும். தொகையை செலுத்தாவிடில் தேதி முன்பதிவு செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04286-233999 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com