பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள அம்மன், குலதெய்வக் கோயில்களில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் உள்ள அரசாயியம்மன், பரமத்தி அங்காளம்மன், பரமத்தி வேலூா் மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், ராஜா சுவாமி உள்ளிட்ட அம்மன், குலதெய்வக் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடிபாட்டு மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.