செப்.15, 17-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்: ஆட்சியா் தகவல்

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, செப். 15, 17-இல் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, செப். 15, 17-இல் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், செப்.15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டியும், செப். 17இல் பெரியாா் பிறந்தநாளையொட்டியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி காலை 9.30 முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு மேலும் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவா்களுக்காக நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுள் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு போ் தனியாகத் தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் தனித்தனியே வழங்கப்படும்.

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வழியாகவும், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com