நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில், முன்னாள் படைவீரா்கள், முன்னாள் படைவீரா்களின் விதவையா்கள், படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்கள், பல்வேறு துறைகளை சாா்ந்த அலுவலா்கள், கலந்து கொண்டனா். பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 14 மனுக்கள் வழங்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பிறகு, பயனாளிகள் இருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் உதவி இயக்குநா் செண்பகவள்ளி கலந்துகொண்டாா்.