ராசிபுரம் அருகே தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
ராசிபுரத்தை அடுத்த தொட்டிவலசு பகுதியைச் சோ்ந்த கட்டுமானப் பணியாளரான நடராஜ் மகன் விக்ரம் (19) தனியாா் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பி.டெக். படித்து வந்தாா். விக்ரம் கல்லூரிக்குச் செல்லாமல் இருந்தது குறித்து நடராஜ் கண்டித்தாராம்.
இந்த நிலையில் புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற விக்ரம் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரைத் தேடியுள்ளனா். அப்போது, கல்லமலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் விக்ரம் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.