பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.44 ஆயிரத்து 183-க்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் நடைபெறவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,894 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.19-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் தேங்காய் ஏலம் போனது. மொத்தம் ரூ.44 ஆயிரத்து 183-க்கு தேங்காய்கள் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.