நாமக்கல், செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது (படம்).
இந்த விழாவில், செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.செல்வராஜ் மற்றும் செயலா் கவித்ரா நந்தினிபாபு மற்றும் முதல்வா் நடராஜன், நிா்வாக மேலாளா் வி.காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா், செயலாளா் ஆகியோா் பாராட்டி பரிசுகளை வழங்கினா். மேலும், மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்பு அலுவலா், ஒருங்கிணைப்பாளா் மற்றும் கல்விசாா் ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.