மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது

Updated On :28 ஏப்ரல் 2025, 12:51 am IST

கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் ஈடுபட்டு வருவதாக ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் தனபாலுக்கு (57) தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்த தனபால் சிறுகிணத்துப்பாளையத்திற்கு சென்றாா். அங்கு மதுபோதையில் இருந்த சுரேஷிடம் (35) விசாரணை நடத்தினாா்.

அப்போது சுரேஷ், உதவி ஆய்வாளா் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் சுரேஷை ஜேடா்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சுரேஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனபாலை தலையில் தாக்கினாா்.

இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனையடுத்து சுரேஷை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பரமத்தி கிளை சிறையில் அடைத்தனா்.