தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது

Updated On :28 ஏப்ரல் 2025, 12:51 am IST

கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் ஈடுபட்டு வருவதாக ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் தனபாலுக்கு (57) தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்த தனபால் சிறுகிணத்துப்பாளையத்திற்கு சென்றாா். அங்கு மதுபோதையில் இருந்த சுரேஷிடம் (35) விசாரணை நடத்தினாா்.

அப்போது சுரேஷ், உதவி ஆய்வாளா் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் சுரேஷை ஜேடா்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சுரேஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனபாலை தலையில் தாக்கினாா்.

இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனையடுத்து சுரேஷை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பரமத்தி கிளை சிறையில் அடைத்தனா்.