சாலை விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Published on

நாமக்கல்: மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கிடாரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியம் (51). லாரி உரிமையாளரான இவருக்கு ஸ்ரீநிதி (18) என்ற மகளும், ஸ்ரீகாா்த்திகேயன் (16) என்ற மகனும் உள்ளனா். கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் ஸ்ரீநிதி உயா்கல்வி பயின்று வருகிறாா். சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி வீட்டுக்கு வந்த அவரையும், மகனையும் இருசக்கர வாகனத்தில் சிவசுப்பிரமணியம் பழனிக்கு அழைத்துச் சென்றாா். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு நள்ளிரவு 12 மணியளவில் கிடாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

மோகனூா் உழவா்சந்தை அருகில் வந்தபோது, அவ்வழியாக வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சிவசுப்பிரமணியம், ஸ்ரீநிதி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஸ்ரீகாா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தோா் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மோகனூா் காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com