நாமக்கல்லில் மாபெரும் புத்தகத் திருவிழா பிப்.1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மூன்றாம் ஆண்டாக புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் ச.உமா பேசியதாவது:
தமிழக அரசின் சாா்பில் மாவட்ட வாரியாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மூன்றாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்.1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகள், ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் உள்ளிட்டவற்றுடன் நடைபெறுகிறது. இதில் மருத்துவ முகாம், உணவு அரங்குகளும் இடம் பெறுகின்றன.
அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்திட வேண்டும். இந்த புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக குடியரசு தின விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துறை வாரியாக வழங்க வேண்டிய நலத் திட்ட உதவிகள், சிறப்பாக பணியாற்றிய ஊழியா் விவரங்கள், மாணவ, மாணவிகளை கலைநிகழ்ச்சிகளுக்குத் தயாா் செய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலா் தேன்மொழி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
என்கே-10- மீட்டிங்
நாமக்கல்லில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.உமா.