நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்
ராசிபுரம் அருகே மீன் பிடிக்கும்போது ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.
ராசிபுரம் அருகேயுள்ள பொன்பரப்பிபட்டி கிராமம், பெருமாள் கோயில் காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (33). இவா் கடந்த அக். 26-ஆம் தேதி கட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றபோது, எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அதைத் தொடா்ந்து, இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.
அதன்படி, ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்று, நிவாரண நிதிக்கான காசோலையை குடும்பத்தினரிடம் அளித்து ஆறுதல் தெரிவித்தனா்.

