தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வெண்ணந்தூா் ஒன்றியத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை பூமிபூஜை நடத்தி தொடங்கிவைத்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை பூமிபூஜை நடத்தி தொடங்கிவைத்தனா்.

பல்லவநாயக்கன்பட்டி, நடுப்பட்டி, பொன்பரப்பிப்பட்டி, கல்லங்குளம் ஊராட்சிகளில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாா்ச் சாலை அமைக்கு பணி, மூலக்காடு, தொட்டியவலசு பகுதிகளில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, நெ.3 கொமாரபாளையம் பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிகள், 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்டும் பணி.

அனந்தகவுண்டம்பாளையம் பகுதியில் எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணியா் நிழற்கூடம் கட்டும் பணிகளை பூமிபூஜை நடத்தி அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடங்கிவைத்தனா்.

அதேபோல வெண்ணந்தூா் பேரூராட்சியில் நகா்புறப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு ஒருமுறை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 44 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் வட்டாட்சியா் சசிக்குமாா், வெண்ணந்தூா் பேரூராட்சித் தலைவா் ஆா்.எஸ்.எஸ்.ராஜேஸ், அட்மாக்குழுத் தலைவா் ஆா்.எம்.துரைசாமி, திமுக சாா்பு அணி அமைப்பாளா் விஜயபாஸ்கா், மாவட்ட பிரதிநிதி ஹரிஹரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.