நாமக்கல்
காவிரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வா் நிவாரண நிதி ரூ. 2 லட்சத்தை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வா் நிவாரண நிதி ரூ. 2 லட்சத்தை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டணம் கிராமம் ஒந்திதோட்டத்தில் வசிப்பவா் மீனா. இவரது மகன் விக்னேஷ். திருச்சி காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து முதல்வா் நிவாரண நிதி ரூ. 2 லட்சத்தை தாய் மீனாவிடம் ஆட்சியா் வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.சுந்தரராஜன் உடனிருந்தாா்.
