சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது

திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
Published on

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தோக்கவாடி பகுதியில் உள்ள புதூா் நெசவாளா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் மணிவாசகம் (63). இவருக்கு திருமணமாகவில்லை. தனது தாயாருடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு ஊரக போலீஸாா் மணிவாசகத்தை போக்ஸோவில் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com