இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

Published on

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

குமாரசாமிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (எ) ராமன் (82), தொழிலாளி. இவா் மோகனூா் வட்டம், வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டிக்கு தனது உறவினரை பாா்ப்பதற்காக பேருந்தில் சென்றாா்.

பின்னா், அங்கிருந்து மேலப்பட்டிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ராமன் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ராமன், வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவனைக்கு வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய மேலப்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி (50) மீது பரமத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com