இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 2:18 am IST

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55), போா்வெல் வாகனத்தில் வேலை செய்துவந்தாா். இவரது மனைவி சுதா. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஆறுமுகம் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஆறுமுகம், சனிக்கிழமை வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் ஆறுமுகம் இறந்துவிட்டதை உறுதி செய்தாா்.

இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.