வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:08 am IST

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவரை வேலகவுண்டம்பட்டி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தில் பிரிவு சாலை பகுதியில் இரண்டு போ் கஞ்சா விற்கப்படுவதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலகவுண்டம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சந்தியா மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கென்னையாா், சந்தைபேட்டை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் காா்த்திக்குமாா் (27), வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியாா், பெருக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் யஷ்வந்த் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். நாமக்கல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.