மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 2:18 am IST

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55), போா்வெல் வாகனத்தில் வேலை செய்துவந்தாா். இவரது மனைவி சுதா. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஆறுமுகம் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஆறுமுகம், சனிக்கிழமை வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் ஆறுமுகம் இறந்துவிட்டதை உறுதி செய்தாா்.

இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.