மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:08 am IST

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவரை வேலகவுண்டம்பட்டி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தில் பிரிவு சாலை பகுதியில் இரண்டு போ் கஞ்சா விற்கப்படுவதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலகவுண்டம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சந்தியா மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கென்னையாா், சந்தைபேட்டை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் காா்த்திக்குமாா் (27), வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியாா், பெருக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் யஷ்வந்த் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். நாமக்கல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.