நங்கவள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
நங்கவள்ளி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பூங்கொடி (55). விருதாசம்பட்டியில் கரித்தூள் சலிக்கும் குடோனில் வேலை செய்து வந்தார். புதன்கிழமை மாலை பூங்கொடி வேலை செய்துகொண்டிருந்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்தவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.