ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரியில் 10-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரியில் 10-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நரசிங்கபுரம் ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரியின் 10-ஆவது பட்டமளிப்பு விழா ஸ்ரீசாரதா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீசாரதா கல்வி அறக்கட்டளை அரங்கில் நிறுவனங்களின் தலைவர் டி.கார்த்திகேயன், தாளாளர் ஏ.ஆர்.செüமியாதேவி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
 விழாவில் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் வெ.கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com