சங்ககிரி அருகே சாலையோர தடுப்பு கல் மீது கார் மோதியதில் ஓய்வுபெற்ற பொறியாளர் சாவு: இருவர் காயம்

சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தடுப்பு கல் மீது கார் மோதியதில் ஓய்வுபெற்ற பொறியாளர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
Published on
Updated on
1 min read

சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தடுப்பு கல் மீது கார் மோதியதில் ஓய்வுபெற்ற பொறியாளர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
 ஈரோடு ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (65). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது மனைவி மஞ்சுளா, மகன் மருத்துவர் எழில் சரவணன், பேத்தி ஸ்ருதி ஆகியோருடன் ராசிபுரத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்குச் சென்று விட்டு மீண்டும் ஈரோட்டுக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
 அப்போது, சேலம் } கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் அருகேயுள்ள கருப்பநாயக்கர் என்ற பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த கல் மீது கார் மோதியது. இதில் காரை ஓட்டிச் சென்ற வேலுசாமி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மஞ்சுளா, ஸ்ருதி ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com