மேட்டூரில் த.மா.கா ஆர்ப்பாட்டம் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை த.மா.கா சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை த.மா.கா சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
 இதுகுறித்து அக்கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ. சுசீந்திரகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
 கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை வழங்காத காரணத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கேள்விக் குறியாகிவிட்டது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை காலை மேட்டூர் அணை பூங்கா நுழையில் அருகே த.மா.கா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்.
 ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு சின்னமேட்டூரில் விவசாயிகள் நிலத்தில் வண்டல் மண் அள்ளப்படும் இடத்தையும், மேட்டூர் நீர்தேக்கத்தையும் பார்வையிடுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com