அ. தி.மு.க. சார்பில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

வாழப்பாடி  ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

வாழப்பாடி  ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 
வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அரிசி, பருப்பு உணவு தானியங்கள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திரட்டப்பட்டன. இந்த பொருள்கள் இரு சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
வாழப்பாடியில்  இளங்கோவன், கொடியசைத்து நிவாரணப் பொருள்கள் ஏற்றிய வாகனங்களை அனுப்பி வைத்தார். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் காமராஜ், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட வேளாண் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் குபாய் என்கிற குபேந்திரன்,  நகரச் செயலாளர்கள் வாழப்பாடி சிவக்குமார், பேளூர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பார்த்திபன், எம்ஜிஆர் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன் உள்ளிட்ட  ஏராளமானோர்கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com