ஓமலூர் அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஓமலூர் அருகே ஊ. மாரமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பாலிகடை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மனைவி லட்சுமி (65). இவர், வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது அவரது வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமியை கடுமையாக தாக்கி அவரது கழுத்தில் இருந்த தாலிக்கொடி, செயின், கம்மல், தோடு உட்பட 17 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.
சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் லட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதைக் கண்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு லட்சுமி சனிக்கிழமை இறந்தார்.
இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்து ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.