ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து மாவட்டச் செயலாளர் க.ராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டச் செயலாளர் சிந்தனை செல்வன்,நாமக்கல் மாவட்டச் செயலாளர் செந்தமிழன், அறிவரசு, ரமேசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேடியப்பன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.