நடிகர் சரவணன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசக்காரனூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நடிகர் சரவணன். சென்னையில் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சேலம் வந்து தங்கிச் செல்வார்.
கடந்த வாரம் சேலத்தில் நடந்த விழாவில் நாடக நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வழங்கிய வேட்டி சேலை மற்றும் இனிப்புகளை நடிகர் சரவணன் வழங்கினார்.
இந்த நிலையில் நடிகர் சரவணனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 6 ஆம் தேதி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு ரத்தம் மற்றும் பல்வேறு சோதனைகள் நடத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடிகர் சரவணன் சென்னையில் சிகிச்சை பெறுவதாகக் கூறி சேலத்தில் இருந்து சென்று விட்டார். தற்போது சரவணன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.