சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூர் ஊராட்சியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்
எஸ். ராஜா வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார். இங்கு முத்துநகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக் கட்டப்படுகிறது. இந் நிகழ்ச்சியில் சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சி.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.