மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு புதன்கிழமை காலை நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகவும், இது சனிக்கிழமை காலை நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நொடிக்கு 13,047 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 104.18 அடியாகவும், நீர்இருப்பு 70.65 டி.எம்.சியாகவும் இருந்தது.