வீட்டின் சுவர் விழுந்து தொழிலாளி சாவு

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ஒருவரது வீட்டின் சுவற்றை இடித்துக் கொண்டிருந்த

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ஒருவரது வீட்டின் சுவற்றை இடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது சனிக்கிழமை சுவர் விழுந்ததில் உயிரிழந்தார்.
தேவண்ணகவுண்டனூர் கிராமம், செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை. இவரது வீட்டு வேலைக்கு எடப்பாடி, பூலாம்பட்டி சாலை, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜம்பு (48) சென்றிருந்தார். சனிக்கிழமை வீட்டு சுவரை இடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் அவர் மீது விழுந்தது. அதில் பலத்த காயமடைந்த அவர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  அவர் இறந்தார். வீட்டின் உரிமையாளர் குழந்தை, கட்டட மேஸ்திரி கோவிந்தன் ஆகிய இருவர் மீது சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com