சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா, கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் வேதியியல் ஆய்வகத்துக்கு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் சீ.ரமணன் தலைமை வகித்தார். தமிழாசிரியை ரங்கநாயகி வரேவற்றார். ஆசிரியர் தினத்தையொட்டி இப்பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பி.செங்கோடன், ஆசிரியை சிகாமணி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், பள்ளியின் வேதியியல் ஆய்வகத்துக்கு ரூ.18ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள் முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டன.