ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கோரி காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் நீரின் அளவு குறைவாக இருந்ததாகவும், விநியோகம் சீராக இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.