கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 97-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு தலைமையாசிரியர் செல்வம், ஆசிரிய, ஆசிரியைகள், எஸ்எம்சி உறுப்பினர் மீனாம்பிகா, பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர். பாரதியாரின் புத்தகங்கள் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.