ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ரிக் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ரிக் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரிக் லாரிகளை நிறுத்தி வைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் 600 ரிக் லாரிகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து ரிக் லாரி உரிமையாளர்கள், முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலர் சேதுராமகிருஷ்ணன், பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com