தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இலவச நீட் பயிற்சி மையம் சங்ககிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.
சங்ககிரி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுட்டுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி, மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர். இதில் 56 பேர் நீட் தேர்வுக்கும், 14 பேர் ஜேஇஇ தேர்வுக்கும் (பொறியியல் நுழைவுத்தேர்வு) பயிற்சி பெற உள்ளனர்.
இது குறித்து ஆயத்த பணிகள் கூட்டம் சங்ககிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஏ.ராஜன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் சோமசுந்தரம், அர்ச்சுனன், உதவித் தலைமை ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.