வழிப்பறி வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

வழிப்பறி வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழிப்பறி வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலூர் மாவட்டத்துக்குள்பட்ட ஆம்பூரைச் சேர்ந்தவர் அன்வர். இவர்  2014 ஆம் ஆண்டு செவ்வாய்பேட்டை பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவரை செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த லோகேஸ்வரன் (29) என்பவர் மிரட்டி,  வெள்ளி நகை, ரூ.500 ரொக்கம், செல்லிடபேசி ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடினாராம்.
இதுதொடர்பான புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து லோகேஸ்வரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் தலைமை  நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் லோகேஸ்வரனுக்கு 7ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதம் விதித்து  நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com