விபத்தில் இளைஞர் சாவு

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசுவைச் சேர்ந்த கோயில் பூசாரி சொக்கலிங்கம் மகன் மோகன் (24),  விபத்தில் இறந்தார்.

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசுவைச் சேர்ந்த கோயில் பூசாரி சொக்கலிங்கம் மகன் மோகன் (24),  விபத்தில் இறந்தார்.
பொறியியல் பட்டதாரியான மோகன், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.  சொக்கலிங்கம் பணிபுரியும் கோயிலின் கும்பாபிஷேகம் செப். 12-இல் நடைபெற்றது. இதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த மோகன்,   தனது  உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பிரசாதகளை வழங்கிவந்தார். 
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜலகண்டாபுரத்தில் வசிக்கும் தனது உறவினர்களுக்கு பிரசாதங்களை கொடுக்க இரு சக்கர வாகனத்தில் மோகன் சென்றார்.
வெள்ளநாயக்கன் பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது காய்கறி பாரம் ஏற்றி வந்த மினிவேன் மோதியது. இதில் பலத்தகாயமடைந்த மோகன், சம்பவ  இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com