சேலம் மாவட்டம், வீரபாண்டியில் சமுதாய வளைகாப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் வீரபாண்டி மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றிய பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வீரபாண்டி எம்எல்ஏ பி. மனோன்மணி கலந்து கொண்டு அவர்களுக்கு வளையல், பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை அணிவித்து ஐந்து வகையான உணவுகளை பரிமாறினர்.
விழாவில் வீரபாண்டி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, கிராம ஊராட்சி ஆணையாளர் செல்வகுமார், ஒன்றிய அட்மா குழுத் தலைவர் வருதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.