தும்பல் பகுதியில் அமமுக வேட்பாளர் கோமுகிமணியன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட தும்பல்,பாப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கோமுகிமணியன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஜெயலலிதா பேரவை செயலாளர் காட்டுராஜா (எ) எம்.பழனிசாமி, மாவட்ட அவைத் தலைவர் க.சண்முகம், ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் பி.டி.குமார், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.