நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கொ.ம.தே.க வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ், சங்ககிரி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.
சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள், புள்ளிபாளையம், வடுகப்பட்டி, அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். சங்ககிரி திமுக ஒன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா மற்றும் நிர்வாகிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.