ஆட்டையாம்பட்டி அருகே சேவாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ராஜாமணி (52).
திமுக பிரமுகரான இவர், சேலம்- கோவை நெடுஞ்சாலை, சின்னசீரகாபாடி சமத்துவபுரம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 12-ஆம் தேதி இரவு கடையை மூடி விட்டு அதன் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியே அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் ராஜாமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குலசேகரன் மற்றும் போலீஸார் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.