ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கோமுகிமணியன் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்தார்.
ஒன்றியத்திற்குட்பட்டதுலுக்கனூர், அம்மம்பாளையம், கல்லாநத்தம், வளையமாதேவி, பைத்தூர், மஞ்சினி, புங்கவாடி,அப்பமசமுத்திரம், தென்னங்குடிபாளையம், சீலியம்பட்டி,தாண்டவராயபுரம், அக்கிசெட்டிபாளையம், சொக்கநாதபுரம், பழனியாபுரி ஊராட்சிகளில் வாக்குகள் சேகரித்தார். அவருடன் சேலம் மாவட்ட அவைத் தலைவர் க.சண்முகம்,மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் காட்டுராஜா(எ)எம்.பழனிசாமி,மாவட்டப் பொருளாளர் எஸ்.மாதேஸ்வரன், ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.