கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை முரசு சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் கெங்கவல்லி ஒன்றியத்தில் ஒதியத்தூர், நடுவலூர்,தெடாவூர்,ஆணையாம்பட்டி,கூடமலை,கொண்டயம்பள்ளி,நரிப்பாடி, மூலப்புதூர், தகரப்புதூர், கோனேரிப்பட்டி,செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி ஆகிய ஊர்களில் காலை முதல் இரவு வரை திறந்த ஜீப்பில் வாக்குச் சேகரித்தார். அவருடன் அதிமுக,தேமுதிக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.