சேலம்
மஹாவீர் ஜயந்தியை முன்னிட்டு நாளை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
மஹாவீர் ஜயந்தியை முன்னிட்டு வரும் ஏப். 17-ஆம் தேதி சேலம் மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள்
மஹாவீர் ஜயந்தியை முன்னிட்டு வரும் ஏப். 17-ஆம் தேதி சேலம் மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக் கூடாது என மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
மாநகர பகுதியில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் ஏப்.17 இல் தேதியன்று தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
அன்றைய தினம் சிறப்புக் குழுக்கள் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு உத்தரவை மீறிச் செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்தார்.