ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சூ. அருள்அந்தோணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
இக் கல்லூரியில் இளங்கலை பாடவகுப்பில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 6 -ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.